Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெங்கு நோய்ப் பரவலைத் தடுத்திடுக: பொதுமக்கள் கோரிக்கை

நவம்பர் 02, 2023 11:52

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அடுத்துள்ள  அக்ரஹாரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி வெங்கடாசலம் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில், தற்போது மழைக்காலம் துவங்கி உள்ளதால், மழையின் காரணமாகவும் சாக்கடை நீர் தேங்கியுள்ளதன் காரணமாகவும், ஊராட்சி பகுதியின் பல்வேறு இடங்களில் கொசு உற்பத்தி அதிகரித்து நோய் பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளதால், டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கிராம சபை கூட்டத்தில்  பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து ஒவ்வொரு பகுதிக்கும் கிருமி நாசினி மருந்து தெளிப்பது உள்ளிட்ட நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  இக்கூட்டத்தில் . ஏராளமானோர்  பங்கேற்றனர்

தலைப்புச்செய்திகள்